News

அழுத்தம் பிர­யோ­கிக்க போகி­றாரா ஹுசைன் ?

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கி­ய ­நா­டு கள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் அதி­ருப்தி வெளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும்

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

செய்ட் அல் ஹுசேனின் இலங்கை குறித்த அறிக்­கையை தொடர்ந்து இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கையின் சார்பில் அறிக்­கையை முன்­வைப்பார் என்­ப­துடன் இலங்­கை­யா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் இலங்­கை­யா­னது பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தி­வ­ரு­வ­தாக கூற­வுள்ள அர­சாங்கம் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற சவால்கள் குறித்தும் விளக்­க­ம­ளிக்­க­வுள்­ளது.

தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பில் இந்த விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்­ளன. அதா­வது 2015ஆம் ஆண்டு ஐ.நா . மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான இலங்கை குறித்து பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது தொடர்­பான மீளாய்வு அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹசைனால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தாம­த­ம­டைந்தால் அடுத்த கட்­ட­மாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்­பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் விளக்­க­ம­ளிப்பார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்கை தொடர்பில் பல்­வேறு அறிக்­கை­களை 37ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­க­வுள்­ளன. இந்த அறிக்­கை­களில் இலங்கை பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் வலி­யு­றுத்­த­வுள்­ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால் இலங்கை குறித்த பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

இதில் வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­க­ளிப்­பு­க­ளுடன் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இது இவ்­வா­றி­ருக்க மார்ச் மாதம் 16 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான பூகோள காலக்­கிர மீளாய்வு விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் கடந்த ஒக்­டோபர் மாதம் இலங்கை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் வாக்­கு­று­திகள் தொடர்­பாக விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது.

பெப்­ர­வரி 26ஆம்­தி­கதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெறுவர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top