News

கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் போராளிகளை வெற்றி பெற வைக்குமாறு கோருகிறார் மாவை!

கூட்­ட­மைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­கின்ற முன்­னாள் போரா­ளி­கள், அவர்­கள் போட்­டி­யி­டும் இடங்­க­ளில் வெற்­றி­பெ­ற­ வேண்­டும் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் மாவை.சோ.சேனா­தி­ராசா மேலும் தெரி­வித்­த­தா­வது,

தங்­க­ளு­டைய உயி­ரைத் துச்­ச­மாக நினைத்து எங்­க­ள் இனத்­தின் விடு­த­லைக்­கா­கப் போரா­டி­ய­வர்­களை நாங்­கள் தூக்கி வீசி­விட முடி­யாது. முன்­னாள் போரா­ளி­கள் தேசிய ஜன­நா­யக நீரோட்­டத்­தில் வாழ்­வ­தற்கு, இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் போட்­டி­யி­டு­கி­ன்றனர். பெண்­கள் வெற்­றி­பெற வேண்­டும் என்று நாங்­கள் எவ்­வ­ளவு திட­மாக செயற்­ப­டு­கின்­றோமோ அதே போன்று போரா­ளி­க­ளும் வெற்­றி­பெற வேண்­டும். இது தேர்­தல் வெற்றி மாத்­தி­ரம் அல்ல. அவர்­க­ளின் எதிர்­கா­ல­மும் வெற்­றி­பெற வேண்­டும்.

கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிடப் பலர் முன்­வ­ர­வில்லை. தங்­களை வேட்­பா­ளர்­க­ளா­கப் போட்டி யிட அனு­ம­திக்­கு­மாறு கோரி பல நூற்­றுக் கணக்­கா­ன­வர்­கள் எங்­கள் பணி­ய­கங்­க­ளுக்கு வந்­தி­ருந் தனர். இது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் முன்­னேற்­றத்­தைக் காண்­பிக்­கின்­றதா இல்­லையா ?

முன்­னாள் போரா­ளி­கள் ஜன­நா­யக ரீதி­யான நீரோட்­டத்­தில் இணைய வேண்­டும் என்­ப­தற்­காக அவர்­க­ளின் கல்­வித் தகை­மைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்கள் வழங்­கப்­பட வேண்­டும். இந்­தக் கோரிக்கை உட்பட 21 விட­யங்­களை நிதி அமைச்­ச­ரி­டம் நாம் முன்­வைத்­தி­ருந்­தோம். அவற்­றில் பெரும்­பா­லா­னவை வரவு -– செல­வுத் திட்­டத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்ன செய்­கி­றது என்று கூறு­ப­வர்­க­ளுக்கு இத­னைத் தெரி­யப் ப­டுத்த வேண்­டும். ஒரு புறம் அர­சி­யல் ரீதி­யா­க­ வும் மறு­பு­றம் எமது தேசத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­க­வும் நாம்­பா­டு­ப­டு­கின்­றோம் என்­றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top