போர்க்குற்றங்கள் இராணுவ அதிகாரியிடம் பிரிட்டன் விசாரணை?

இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரிட்டன் விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட இராணுவ அதிகாரியிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள் ளாக்கப்பட்ட இராணுவ அதிகாரி யார் என்ற விவரங்கள் எதையும் சிங்கள ஊடகம் வெளியிடவில்லை. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரிட்டன் இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.