India

வேட்பாளரின் வீட்டின்மீது பொற்றோல் குண்டுத் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top