மஹிந்தவைப் பிரதமராக்கும் பயணம் ஆரம்பமாம்!

2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ராஜபக் ஷக்களின் ஆட்சியில் கொள்ளையடித்ததாக கூறினார்கள், தாங்கள் தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே மிகவும் மோசமான கொள்ளைக்கார ஆட்சியாக மாற்றம் கண்டுள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறியவர்கள் இன்றுவரை அவற்றை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளனர். எமது ஆட்சியில் குற்றங்கள் இடம்பெற்றவில்லை என கூறவில்லை, எனினும் ஒருசிலர் செய்த குற்றங்கள் காரணமாக பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மஹிந்த ராஜபக் ஷவை தண்டிக்கவே எமது மக்களும் வாக்களித்தனர். எனினும் நாட்டுக்கு தகுதியான தலைவர் மஹிந்த ராஜபக் ஷதான் என்பதை அவர் ஆட்சியில் இல்லாத போதே மக்கள் விளங்கிக்கொண்டனர்.
ஆகவே இப்போது நாம் ஆரம்பித்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றியில் இருந்து நாம் மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிரதமராக்கும் எமது பயணத்தை ஆரம்பிப்போம். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான போராட்டமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.