ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குத்தலில் 10 பேர் பலி

ஈராக்கின் மோசூல் மற்றும் கிர்க்குக் பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள சுன்னி இன மக்களின் உள்ளூர் தலைவரின் வீட்டை குறிவைத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த சுன்னி இன தலைவர், மகன் மற்றும் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கிர்க்குக் நகரில் ஈராக் ராணுவ அதிகாரி தனது குடும்பத்துடன் காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகள் போலியாக சோதனைச் சாவடியில் அமைத்தனர். இது அறியாமல் சோதனைச் சாவடியில் நின்ற ராணுவ அதிகாரியின் காரை எரித்தனர். இதில் சிக்கிய ராணுவ அதிகாரி, அவரின் கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர் உட்பட 6 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.