News

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல் – போலீஸ் கமாண்டர் உள்பட 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் கமாண்டர் உள்பட 5 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாரில் போலீஸ் கமாண்டராக இருந்தவர் ஜனான் மமா. இவர் இன்று காலை தனது பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் ஜனான் மமா, அவரது பாதுகாவலர்கள் 3 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top