ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்துக்குட்பட்ட ஷின்டாட் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 9 போலீசார் உயிரிழந்தனர்.
இதேபோல், போலீசார் சென்ற ரோந்து வாகன அணிவகுப்பு பாதையில் சாலையோர குண்டுவெடிப்பில் மேலும் இரு போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆயுதம்தாங்கிய அதிநவீன வாகனங்கள் சேதம் அடைந்தன.
போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றனர்.