உதயங்கவை நாடு கடத்த மறுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!

மிக் போர் விமானக் கொள்வனவில் நிதி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாடு கடத்த ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் விடுத்த கோரிக்கையை ஐக்கிய அரபு இராச்சியம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நாடு கடத்தல் உடன்பாடு 2002ஆம்ஆண்டு எட்டப்பட்ட போதும் அதற்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்தநிலையில் தற்போது உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான மாற்று முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.