சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம்

சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது.
அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருண்டு பிள்ளைகளின் நிலை கருதி ஆனந்தசுதாகரனின் விடுதலையினை துரிதப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
இன்று அடையாள உண்ணாவிரத போராட்டமாக நடாத்தப்படுவதாகவும் ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுpறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடாத்துவதற்கு வடகிழக்கில் உள்ள பெண்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.