கனடாவில் மின்சார ஒயர்கள் அருகில் இறந்த கிடந்த ஊழியர்:

கனடாவில் மரத்தை வெட்டி கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Deerwood Crescent பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த செடிகளை ஊழியர் ஒருவர் வெட்டி கொண்டிருந்தார். அவருகில் மின்சார ஒயர்கள் இருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இறந்த ஊழியரின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
அவர் மின்சார ஒயர்களிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி இறந்தாரா என்பதை இன்னும் பொலிசார் உறுதி செய்யவில்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மின்சார லைன்கள் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.