News

கென்யாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு 100 பேர் பலி.

கென்யாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வாரக்கணக்கில் பெய்யும் கனமழையாலும் நிலச்சரிவு காரணமாகவும் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். மேலும், 100 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு கென்யா மற்றும் மத்திய கென்யாவின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் நைரோபியிலிருந்து, மொம்பாஸா துறைமுகத்துக்குச் செல்லும் வழியெங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் தண்ணீர் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், மேலும் மீட்புப் பணிக்கு ஆட்கள் மற்றும் நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தேசியப் பேரிடராக இதனை அறிவித்தால்தான் இதற்கான நிதியைத் திரட்ட முடியும். தேசிய பேரழிவு மேலாண்மை நிதியும் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களினால், இவ்வாறான தீவிர இயற்கைச் சீற்றங்களை ஆப்பிரிக்க நாடுகள் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top