News

சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் பலி : 2194 குடும்பங்கள் வெளியேற்றம் .

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின்னல் தாக்கி ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதேவேளை, திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலேயே மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top