நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் திடீர் மரணம் .

பழமைவாதக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். 57 வயதாக அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.