முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு ஊர்தியில் வெளிநாட்டுப் பெண் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் தீபமேந்திய ஊர்தி இன்று வவுனியாவை வந்தடைந்த போது, வெளிநாட்டு பிரஜையான பெண் ஒருவர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். வவுனியா பஜார் வீதியில் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு ஊர்தி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வீதியால் சென்ற குறித்த வெளிநாட்டுப் பெண், முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தனார்.
வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேற்றினார்.