ரொறன்ரோ வாகன தாக்குதலில் உயரிழந்தவர்களுக்காக, நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் வாகனத்தால் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான அலெக் மினாஷியன் மீது 10 பிரிவுகளில் கொலைக்குற்றமும், திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பாக 13
பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டம் நேற்று இடம்பெற்றது.