கோத்தபாய – மகிந்தவுக்கு இடையில் அதிகார போட்டியா? மகிந்த வெளியிட்ட தகவல் ..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “ஜனாதிபதியாவதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு இருக்கும் ஆதரவை நான் அறிவேன். இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கும் போது, கோத்தபாய ராஜபக்ச தொடர்பான பொதுமக்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.
எங்கள் இருவருக்கும் இடையில் பிளவுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய். எங்கள் இருவருக்குள்ளும் எவ்வித அதிகாரப் போட்டியும் கிடையாது. எனது சகோதரர்களுடன் இணைந்து நாட்டில் வணிகம் செய்வதாக குற்றம் சாட்டியவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள். பொது எதிரணியில் இருப்பவர்கள் ராஜபக்சக்கள் மட்டுமல்ல. ஏனைய பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.” என கூறியுள்ளார்.