சிறுமியின் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்-வடமாகாண கல்வியமைச்சர்.

வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பாடசாலை மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா வின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப் பட்டார். ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த இக் கதியானது மிகுந்த அதிர்ச்சியையும்இ கலலையையும் ஏற்படுத்தி யுள்ளது.
. இத்தகைய துன்பகர மான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாது இருக்க சிறுபிள்ளைகள் தொடர்பான பெற்றோர்களின் விழிப்புனர்வு அவசியமானதாகும்.
.எனினும் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறை களுக்குள் நடவடிக்கைகள் மேற் கொள் வதற்குத் தீர்மானித்துள்ளது என்ற வகையில் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களினால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம். இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற் கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்.
இவ்வேளையில் இச் சிறுமியின் படுகொலை தொடர்பில் காவல்துறையினர் நடுநிலையுடனும் நீதியாகவும் செயற்பட்டு அனைத்துக் குற்றவாளிகளையும் நீதி மன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் கடமையைக் கூடிய விரைவில் நிறை வேற்ற வேண்டும் என வடமாகாணக் கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கின்றது.
எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாதிருக்க பொலிசாரினதும்நீதி மன்றத்தினதும் இக் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையானது இத்தகையவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும்.