News

தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து – 2 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் தொழுகை நேரத்தில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் மால்மேஸ்பரி நகரில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கே தன் கண் எதிரே பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்திச் சாய்த்தார்.

இதனால் மசூதியில் தொழுகைக்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரை உடனடியாக சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அந்த நபர், அதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அவர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது பயங்கரவாதத்தின் கூறு என கூறினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top