இராணுவ இரகசியத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை.

இரகசியமாக வைத்திருக்க வேண்டிய இராணுவத்தின் தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் நபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் தகவல்கள் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல எனவும் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இராணுவ தளபதி இந்த அறிக்கையை கடந்த வாரம் இராணுவத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இராணுவம் தொடர்பான தகவல்கள் கசிவதன் மூலம் இராணுவத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்