எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு எதிரணிக்கு இல்லை! – சுமந்திரன்.

கூட்டு எதிர்க்கட்சி என அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தினேஸ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இயங்கும் ஒரு குழுவினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் போட்டியிட்டு தெரிவானவர்களே. அவர்கள் தற்போது முன்னாள் ஜனாதிபதிக்கு தரகர்களாக செயற்படுகின்றார்கள்.
இருப்பினும் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பானவர்களே. அக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே ஆட்சியை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவும் முடியாது, அதை கோரும் உரிமையும் அவர்களுக்கு இல்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.