ஒன்ராறியோ பொது சேவை மேலாளர்களின் ஊதியங்கள் முடக்கம்!

ஒன்ராறியோவின் புதிய முதல்வரான டக் வோட் பொது சேவை மேலாளர்களின் ஊதியத்தை முடக்கவும் நிர்வாக மற்றும் நிர்வாக இழப்பீடுகளை மதிப்பீடு செய்யுமாறும் உத்தரவு இட்டுள்ளார். அரசாங்க செலவினங்ககை கட்டுப்படுத்தும் இவரது இறுதி முயற்சியாக இது அமையும் என கூறப்பட்டுள்ளது.
திறமைக்கேற்ற ஊதியம் பாதிக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. வோட் முன்னர் பொது சேவைகளின் பணியமர்த்தலை முடக்கத்தின் கீழ் வைத்திருந்தார். இவைகள் குறித்த கருத்து கோரிக்கைக்கு வோட்டின் காரியாலயம் உடனடியாக பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.<