ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று சனிக்கிழமை கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர் 3 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும் இவர் மீண்டும் வெளியில் வராத நிலையில், அவர் கடல் பாதுகாப்பு குழுவினரால் தண்ணீர் இருந்து இழுத்து எடுக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அவரசமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.<