கஞ்சாவில் இருந்து பீர் தயாரிக்கும் கனடா .

கஞ்சா செடியின் வேர், தண்டு மற்றும் குச்சிகள் மூலம் கனடாவில் பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்துவது கட்டுக்கடங்காமல் போனது. அதே போல போதைப் பொருட்கள் உபயோகமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கனடா நாட்டில் போதை மருந்துகள் உபயோகிப்பது கடந்த வருடம் அக்டோபர் 17 முதல் சட்ட விரோதம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக போதைப் பொருட்களான கஞ்சா, மரிஜுவானா போன்றவை உபயோகிப்பதை குறைக்க கனடா நாட்டின் மதுத் தொழிற்சாலைகள் முயன்று வருகின்றன. கனடா நாட்டில் பீர் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆகவே போதைப் பொருட்கள் உபயோகிப்போரை பீர் பருக வைக்க பீரை போதைப் பானமாக மாற்ற இந்த தொழிற்சாலைகள் முயன்று வருகின்றன. இதன் மூலம் சாராயம் சேர்க்காத பீர் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் முயற்சியாக பார்லியுடன் மரிஜுவானா என்னும் போதை மருந்தின் எண்ணெய் கலந்து பீர் தயாரிக்கப்பட்டது.
அதை அருந்திய மக்கள் அதைப் புகழ்ந்த போதிலும் அந்த வாசனை நன்றாக இல்லை என கருத்து தெரிவித்தனர். மேலும் அது ரசாயனக் கலவையாக உள்ளதாக தெரிவித்தனர். அதை ஒட்டி டூம வெண்ட்சுச் எனப்படும் மது தயாரிக்கும் நிறுவனம் மரிஜுவானா எண்ணெய்க்கு பதில் கஞ்சாவை கலந்து பீர் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் கஞ்சாவின் வேர், குச்சிகள் மற்றும் தண்டு இந்த பீர் தயாரிப்பில் உபயோகப்படுத்துவதாக கூறி உள்ளது. மேலும் இந்த கஞ்சா வேர், குச்சிகள் மற்றும் தண்டு ஆகியவை குப்பைகளாக தூக்கி எறியப்படுகிறது. இதன் மூலம் இந்தக் குப்பைகள் அழிக்கப்படுகின்றன எனவும் நிறுவனம் தெரிவிக்கிறது.