கோஸ்டி மோதலுக்கு சென்ற 13 இளைஞர்கள் கைது.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை “ஐ” குழு எனவும் “சவா” குழு எனவும் அடையாளப்படுத்திக் கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த குழுவினர் இன்று மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பொல்லுகளுடன் 13 இளைஞர்கள் வாகனமொன்றில் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் கோஸ்டி மோதலுக்கு தயாராக எழுமட்டுவாழ் பகுதிக்கு செல்கின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , பொலிசாரை கண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து பளை பொலிசாருக்கு, கொடிகாம பொலிசார் அறிவிதத்தை அடுத்து , பளை பொலிசார் மருதங்கேணியில் உள்ள பளை பொலிசாரின் காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிசார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்த பொலிசார் , வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யபட்ட 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.