News

சி.வி.யின் அழைப்பை ஏற்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்க

வடக்­கிற்கு வந்து மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்­கின்றேன் என சமூக நலன்­புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க கோரி­யுள்ளார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்­பிற்கு பதி­ல­ளிக்கும் முக­மாக அவர் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்த அறிக்­கையில் மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிய வடக்­கிற்கு விஜயம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் ஊட­கங்கள் வாயி­லாக அறி­வித்­தி­ருந்தார். ஆகவே வடக்கு முதல்­வரின் குறித்த அழைப்பை நான் ஏற்­கின்றேன்.

எனவே சி.வி விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து வடக்கில் கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொள்ள நான் தயா­ராக உள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top