நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் ஏற்றால் பதவி விலகுவேன்! – டெனீஸ்வரன்..

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டால், தாம் பதவி விலக தயாராக இருப்பதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 127ஆவது அமர்வின் டெனீஸ்வரன் தொடர்பான விசேட அமர்வு இன்று கைதடியிலில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “எனது அமைச்சு பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டால் நான் எனது பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.