News

பிரித்தானியாவில் கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் ஓடிய பெண்ணால் பரபரப்பு !!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் சாலை வழியே கழுத்து அறுபட்ட நிலையில் உதவி கேட்டு ஓடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து ஹில்டன் ஹொட்டலில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி தொடர்புடைய 3 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள ஹில்டன் ஹொட்டலில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் பெண் ஒருவர் வெளியேறி சாலையில் வந்து உதவி கோரியுள்ளார். காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது 3 நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே காரணம் குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விசாரணை நிமித்தம் ஹில்டன் ஹொட்டல் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top