News

மன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்! கனே­டி­யத் தூதர் திடீர் விஜயம்..

மன்­னார் மாவட்­டத்­துக்கு நேற்­றுச் சென்ற கனே­டி­யத் தூதர், மாவட்­டச் செய­ல­ரைச் சந்­தித்து மாவட்­டத்­தின் தற்­போ­தைய நிலமை தொடர்­பில் கேட்­ட­றிந்­து­கொண்­டார். மன்­னார் மாவட்­டத்­துக்கு மாவட்­டச் செய­ல­ராக மோகன்­ராஜ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரைச் சந்­தித்து நில­மை­க­ளைக் கேட்­ட­றிந்­தார். குறிப்­பாக மாவட்­டத்­தில் எதிர்­கொள்­ளும் நெருக்­கடி, அதற்­காக மேற்­கொள்­ளக்­கூ­டிய நடவடிக்கை­கள் தொடர்­பி­லும் தற்­போது ஒரு மாதத்­துக்­கும் மேலாக திருக்­கே­தீஸ்­வ­ரம் பகு­தி­யில் தோண்­டப்­ப­டும் எலும்­புக்­கூ­டு­கள் தொடர்­பி­லும் வின­வி­யுள்­ளார்.

இவற்­றுக்­குப் பதி­ல­ளித்த மாவட்­டச் செய­லர், தற்­போது மன்­னா­ரில் மட்­டு­மன்றி வடக்­கில் முக்­கிய பிரச்­சி­னை­யா­கக் காணப்­ப­டு­வது போதைப்­பொ­ருள் ஊடு­ரு­வ­லும் அதன் பாவ­னை­யும். அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அடுத்த மிக முக்­கிய பிரச்­சினை எமது இளை­யோ­ருக்­கான வேலை­வாய்ப்பு இன்மை. இளை­யோ­ரின் அதிக விரக்­திக்கு இதுவே கார­ண­மா­க­வுள்­ளது. எனவே இளை­யோ­ருக்கு வேலை வாய்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தான தொழில் நிறு­வ­னங் கள் நடுத்­தர முத­லீ­டு­க­ளுக்கு முன்­வர வேண்­டும் – என்று பதி­ல­ளித்­தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top