மஹிந்த – சம்பந்தன் சந்திப்பு விரைவில்!

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சந்தித்து அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக முக்கிய பேச்சு நடத்தவுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு குறித்து கந்துரையாடியிருந்தார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்துவார் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.