News

விஜயகலாவுக்கு நான் அப்பிடி செய்தேனா ? யார் சொன்னது ?

தன்­னு­ட­னான அலை­பேசி உரை­யா­டலை ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டு­மாறு விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அந்த உரை­யா­ட­லில் குறிப்­பிட்­ட­தாகப் பிர­தி­ய­மைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார்.கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் பேசிய விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், விடு­த­லைப் புலி­க­ளின் மீள்­வ­ருகை குறித்­துக் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார். இது தென்­னி­லங்­கை­யில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்­த­நி­லை­யில், சில தினங்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு பேசிய பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க, செய்­தி­யா­ளார்­கள் முன்­னி­லை­யி­லேயே விஜ­ய­க­லா­வுக்கு அலை­பேசி அழைப்பு ஏற்­ப­டுத்­திப்­பே­சி­யி­ருந்­தார்.பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்­க­வின் இந்­தச் செயற்­பாட்­டுக்கு விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கவலை வெளி­யிட்­டி­ருந்­தார்.

“ஒரு பெண்­ணுக்கு ரஞ்­சன் துரோ­கம் செய்­தி­ருக்­கின்­றார். அது­வும் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு எப்­படி துரோ­கம் செய்­தி­ருக்­கின்­றார் என்­ப­தையே இந்த உல­கம் அறிந்­தி­ருக்­கின்­றது” என்று விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் குறிப்­பிட்­டி­ருந்­தார். இந்­த­நி­லை­யில், குறித்த விட­யம் தொடர்­பில் பிர­தி­ய­மைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்­க­வி­டம் கொழும்பு ஊட­கம் ஒன்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. இதற்குப் பதி­ல­ளித்துப் பேசிய அவர்,

“தன்­னு­ட­னான தொலை­பேசி உரை­யா­டலை ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டு­மாறு விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அந்த உரை­யா­ட­லில் கூறி­யுள்­ளார். அவ­ரு­ட­னான அந்த உரை­யா­டலை தர்­மத்­துக்கு முர­ணா­னது என்று ஒரு­போ­தும் கூற­மாட்­டேன்.

அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் நான் ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவே செயற்­பட்­டி­ருந்­தேன். நான் மக்­கள் முன்­னி­லை­யி­லேயே அவ­ரி­டம் கேள்வி கேட்­டி­ருந்­தேன். சுமு­க­மா­கவே அவ­ரு­டன் பேசி­யி­ருந்­தேன்.ஒரு­போ­தும் அவ­ருக்கு அவ­தூறு கூறவோ அல்­லது அவ­ரது மதிப்புக்குப் பங்­கம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் நான் செயற்­ப­ட­வில்லை’’ – என்­றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top