News

 டெனீஸ்வரன் வரவால், பதவியிழக்கப் போகும் அமைச்சர் யார்?

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் இருந்து மீன்­பி­டி மற்றும் போக்குவரத்து அமைச்­சர் டெனீஸ்­வ­ரனைப் பதவி நீக்­கி­ய­மைக்கு நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்ளமையை அடுத்து, அவர் தனது அமைச்­சுப் பொறுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண சபை­யில் இருந்து ஒரு அமைச்­சர் பதவி வில­க­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு அமை­வாக, மாகாண அமைச்­ச­ர­வை­யில் ஆகக் கூடி­யது 5 பேர் மாத்­தி­ரமே பதவி வகிக்­க­லாம். ஏற்­க­னவே 5 பேர் பதவி வகிக்­கின்­ற­னர். சி.வி.விக்­னேஸ்­வ­ரன், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன், க.சர்­வேஸ்­வ­ரன், ஜி.குண­சீ­லன் ஆகி­யோர் உள்­ள­னர். நீதி­மன்­றத் தீர்ப்­பி­னால் இவர்­க­ளில் ஒரு­வர் பதவி வில­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. யார் அவர் என்­கிற எதிர்­பார்ப்பு எகி­றி­யுள்­ளது.

எனி­னும் நீதி­மன்­றத் தீர்ப்பு தனது கைக­ளுக்­குக் கிடைத்த பின்­னர் ­தான் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்று முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

டெனீஸ்­வ­ரன் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட பின்­னர், அவர் வகித்த அமைச்­சுப் பொறுப்­புக்­கள் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட இரண்டு அமைச்­சர்­கள் பங்­கிட்­டி­ருந்­த­னர். இதன் கார­ண­மாக அவ­ரது அமைச்­சுப் பொறுப்­புக்­களை வகித்­த­வர்­கள், ஆளு­நர் முன்­ன­பாக மீண்­டும் பத­வி­யேற்­றுத் தமது பழைய அமைச்­சுப் பொறுப்­புக்­களை தொடர வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top