News

மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து – 45 பேர் காயம்..

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹால் சாலையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் மூன்று மணியளவில் திடீரென தீ விபத்து நேரிட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்போ டேங்கர்கள் சென்றது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிர்வில் அனும்திக்க்ப்பட்டு உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top