கனேடிய மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கை பெண் நியமனம்!

கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று அறிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங்கனி குமாரநாயக்கவே இவ்வாறு கனேடிய மேல்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இவர் ஒன்றாறியோவின் பிரம்டன் மாநில மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.