மதுபோதையில் ‘ஜனபலய’ போராட்டத்தில் ஈடுபட்டோர் வைத்தியசாலையில்

கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர் மதுபோதையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்டோரே இவ்வாறு மதுபோதையில் வீதிகளில் வீழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் 81 பேர் இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்