மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்!

மன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த இடத்திலிருந்து, 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.