India

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பஸ் விபத்தில் 20 பேர் பலி;13 பேர் படுகாயம்.

இந்தியாவின் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்த பஸ் ஒன்று இன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய எல்லையில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று பஸ் பயணித்தது. 

இதன் போது கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.

இந்த கோரவிபத்தில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top