News

ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

அந்தவகையில் குறித்ததலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தோயோகப்பூர்வ இல்லாத்தில் நேற்று முன்தினம் இரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏதேனுமொரு வழியில் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட காலப்பகுதியென்பது அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த காலப்பகுதி என்பதால் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இதன் போது தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மேற்படி யோசனையின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு, ஆறுமுகன் தொண்டமான், அதாவுல்லா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரமளவில் இக்குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கலந்துரையாடலின் போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, எஸ்.பி. திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top