மலேசியாவில் விபத்து – மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட அறுவர் உயிரிழப்பு!

மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.
கோலாலம்பூரின் – கோத்தா பாரு நெடுஞ்சாலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் சாரதி ஒருவரின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.