இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் சுற்றுலாவாசிகள் ஆவர். பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இதில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துக்களில் சிக்கி இந்தியர் உள்பட 28 பேர் உயிரிழந்தது எகிப்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.