நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இதன் ஆழம் 10 கிலோ மீட்டராக பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர், 5.7 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவுகளில் இரண்டு மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கனடா தெரிவித்துள்ளது.
மேலும் கனடா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்க அதிர்வுகள், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.