சர்ரே தீவிபத்து 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகுமுடிவுக்கு கொண்டுவரப்பட்டது!

சர்ரே பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து, இரண்டு மணித்தியால போராட்டத்திற்கு பிறகு முடிவிற்கு வந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்து, சர்ரேயின் பிரிட்ஜ்வியூ பகுதியில் அமைந்துள்ள பழைய வாகன தொழிற்சாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்டது.
1,000 சதுர அடி உலோகத்தால் ஆன கட்டடத்தில் முழுமையாக தீ பரவியதாகவும், 24 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த தீவிபத்தினால் எவரும் காயமடையவில்லை என்ற போதிலும், குறித்த தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்த தீவிபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.