பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினை பெற்று செங்கலடி மாணவன் சாதனை!

மட்டக்களப்பு – செங்கலடியை சேர்ந்த ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகிய நிலையில், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37வது இடத்தினையும் பெற்று தனது பெற்றோருக்கும், பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.