ஆனால், அந்த ஆடியோவில் உள்ள தகவல் உண்மை இல்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் மறுப்பு தெரிவித்தார் பிரதமர் ஒலெக்ஸி.
அதேசமயம், அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை போக்குவதற்காக ராஜினாமா செய்வதாக கூறினார். ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்த அதிபர், ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்தார். அத்துடன், பிரதமர் ஒலெக்ஸியும், அவரது மந்திரிசபையும் பதவியில் நீடிக்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டார்.