தண்டர் பேயில் கொலை மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்

வடக்கு ஒன்ராறியோவில் ஒரு இளைஞன் மற்றும் 59 வயதான ஒருவரை தாக்கியதாகக் கூறி ஒரு பெண்ணை கொலை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிசார் கூறுகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் ஒன்ராறியோ தண்டர் பேயில் ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் இளைஞன் மற்றும் 59 வயதான ஒருவரையும் தாக்கி காயப்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர்.
ஆய்வாளர்கள் கூறுகையில், காயமடைந்த இருவரையும் மருத்துவ மணைக்கு கொண்டு சென்றதாகவும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார். அதே நேரத்தில் மற்ற நபர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Courtney Marie Labelle, 34, இந்த சம்பவத்தில் இரண்டாம் நிலை கொலை மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவர்களது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தகவல் உள்ள எவரையும் முன் வருமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.