சேக்கம் சமூகசேவை அமைப்பு நடாத்தும் மன-உள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு பற்றிய அறிவித்தல்
கடந்த 34 ஆண்டுகளாக கனடாவில் வெற்றியுடன் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டர் நிறுவனமான சேக்கம் சமூகசேவை அமைப்பு, தனது தொடர்ச்சியான சமூகப்பணியின் ஒரு அங்கமாக, எதிர்வரும் சனிக்கிழமை, ஜூன் 17ம் திகதி, மன-உள ஆரோக்கியம் குறித்த முக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடாத்துகின்றது.
ஸ்காபரோவில், இலக்கம் 1686 எல்ஸ்மயர் வீதி, மைக்கோவனிற்கு கிழக்காக அமைந்துள்ள ஜேசீஸ் மண்டபத்தில் (JCs Banquet Hall) காலை 9:30 மணிமுதல் மாலை 2:00 மணிவரை நடைபெறவுள்ள நிகழ்வில், மன-உள நிறுவனங்கள் பலவும் கலந்து கொள்ளவுள்ளதுடன், மதிய உணவும் வழங்கப்படும். இலவசமாக நடைபெறும் இந் நிகழ்வில், மனஅழுத்தம், உளச்சோர்வு போன்றவை உட்பட, இதனால் மாணவர்கள், பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஏற்படும் பாதிப்புக்கள், இதற்கான மருத்துவ உளநல வாய்ப்புக்கள், சட்டரீதியான சிக்கல்கள், அவற்றை அணுகுவதற்கான சரியான தீர்வுகள் பற்றிய மேலதிக விளக்கங்களை, இத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் வழங்கவிருப்பதுடன், உங்கள் கேள்விகளுக்கும் பதில்வழங்கும் முக்கிய ஆய்வரங்கமாக நடைபெறவுள்ளது.
அனுமதிச் சீட்டு எதுவுமின்றி இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்குவதுடன், நன்மையடையுமாறு அன்போடு அழைக்கிறோம். நன்றி.
மேலதிக தகவல்களுக்கு: 416.464.3551 அல்லது 416.797.1517