ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி 28-09-2025 அன்று பிரித்தானியவில் ஈருருளிப்பயண போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம், நெதர்லாந்து ரொத்தர்டாம் நகரசபை ஊடாக நகர்ந்து செல்லும் இந்த மனித நேய ஈருருளிப்பயணம், நான்காம் நாளான இன்று காலை (31- 09-2025) நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் தொடங்கப்பட்டது.
இந்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று மதியம் பெல்யியம் எல்லையை சென்றடைந்துள்ளது.