ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த பிரிவினைவாதப் படைக்கு ஆயுதங்களை அனுப்பியதாக கூறி, ஏமனில் உள்ள முகல்லா துறைமுக நகரத்தின் மீது இன்று(30.12.2025) சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (UAE) பிரிவினைவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல், இராச்சியத்திற்கும் எமிரேட்ஸால் ஆதரிக்கப்படும் தெற்கு இடைக்கால கவுன்சிலின் பிரிவினைவாதப் படைகளுக்கும் இடையிலான பதட்டங்களில் புதிய அதிகரிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஏமனின் தசாப்த காலப் போரில் போட்டியிடும் தரப்புகளை ஆதரித்து வந்த ரியாத் மற்றும் அபுதாபி இடையேயான உறவுகளையும் இது மேலும் சிக்கலாக்குகிறது.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, துறைமுகத்தில் உள்ள இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்களை குறிவைத்து கூட்டணி விமானப்படைகள் இன்று காலை ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன என்று கூறியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைரா துறைமுகத்திலிருந்து வந்த இரண்டு கப்பல்களில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆயுதங்கள் அமீரஎமிரேட்ஸின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால சபையின் பிரிவினைவாதப் படைகளுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
“எந்தவொரு இணை சேதமும் ஏற்படவில்லை” என்பதை உறுதி செய்வதற்காக இரவு முழுவதும் தாக்குதலை நடத்தியதாக சவூதி இராணுவம் தெரிவித்துள்ளது.
மற்றொரு நாடான சூடானிலும்
முகல்லா, ஏமனின் ஹட்ராமவுட் கவர்னரேட்டில் உள்ளது, அதை கவுன்சில் சமீபத்திய நாட்களில் கைப்பற்றியது. துறைமுக நகரம் ஏடனுக்கு வடகிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் (300 மைல்) தொலைவில் உள்ளது.
இது 2014 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவைக் கைப்பற்றிய பின்னர் ஏமனில் ஹவுதி எதிர்ப்புப் படைகளின் அதிகார மையமாக இருந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை சவூதி அரேபியா கவுன்சிலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முகல்லாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஹவுத்திகளுடன் சண்டையிடும் கூட்டணியில் உள்ள மற்றொரு குழுவான சவூதி ஆதரவு தேசிய கேடயப் படைகளுடன் இணைந்த படைகளை கவுன்சில் அங்கிருந்து விரட்டியடித்தது.
கவுன்சிலுடன் இணைந்தவர்கள், 1967-1990 வரை தனி நாடாக இருந்த தெற்கு ஏமனின் கொடியை அதிகளவில் பறக்கவிட்டனர். தெற்கு ஏமன் மீண்டும் ஏமனில் இருந்து பிரிந்து செல்ல அழைப்பு விடுக்கும் அரசியல் சக்திகளை ஆதரிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நாட்களாக பேரணி நடத்தி வருகின்றனர்.
பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் சவூதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவை நெருங்கிய உறவுகளைப் பேணுகின்றன மற்றும் OPEC எண்ணெய் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் செல்வாக்கு மற்றும் சர்வதேச வணிகத்திற்காகவும் போட்டியிட்டுளள்ன.
செங்கடலில் உள்ள மற்றொரு நாடான சூடானிலும் வன்முறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
