News

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இந்நிலையில், காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடக்கம் என பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

,இந்த தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முழு விவரத்தை பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலில் குறைந்தது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரை பகுதியில் இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் மூத்த பயங்கரவாதி கைதியை இஸ்ரேல் கைது செய்த நிலையில் இதற்கு பதிலடியாக உடனடி அச்சுறுத்தலாக மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top