News

பாகிஸ்தானில் கோர விபத்து: பேருந்துடன் டேங்கர் லாரி மோதி தீப்பற்றியதில் 20 பேர் உடல் கருகி பலி

 

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துடன் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பேருந்துடன் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிருடன் எரிந்தனர்.

லாகூரில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டது.

விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாகூரில் இருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து அதிவேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியில் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன அதில், பல பயணிகள் தப்பிக்க வழியில்லாமல் உயிருடன் எரிந்தனர்.

இந்த கோர விபத்தில், தீக்காயங்களுக்கு ஆளான ஆறு பயணிகள் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

விபத்தில் பலியான பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்துள்ளதாகவும், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குப் பிறகு தீ இரண்டு வாகனங்களையும் சூழ்ந்ததால் மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டது. மீட்புப்படை மற்றும் தீயணைப்பு குழுக்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துடன் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பேருந்துடன் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிருடன் எரிந்தனர்.

லாகூரில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டது.

விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாகூரில் இருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து அதிவேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியில் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன அதில், பல பயணிகள் தப்பிக்க வழியில்லாமல் உயிருடன் எரிந்தனர்.

இந்த கோர விபத்தில், தீக்காயங்களுக்கு ஆளான ஆறு பயணிகள் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

விபத்தில் பலியான பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்துள்ளதாகவும், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குப் பிறகு தீ இரண்டு வாகனங்களையும் சூழ்ந்ததால் மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டது. மீட்புப்படை மற்றும் தீயணைப்பு குழுக்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top